சிவவாக்கியம் பாடல் 182 – ஆதி அந்தம்
182. ஆதி அந்தம் மூல விந்து நாதம் ஐந்து பூதமாய்.
ஆதி அந்தம் மூல விந்து நாதம் ஐந்து எழுத்துமாய்.
ஆதி அந்தம் மூல விந்து நாதமேவி நின்றதும்,
ஆதி அந்த மூல விந்து நாதமே சிவாயமே!
சிவவாக்கியம் பாடல் 181 – ஒரேழுத்து உலகெலாம்
181. ஒரேழுத்து உலகெலாம் உதித்த அவ் அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை,
நாளேழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே!
சிவவாக்கியம் பாடல் 180 – உருவம் அல்ல
180. உருவம் அல்ல ஒலியும் அல்ல ஒன்றதாகி நின்றதே.
மருவும் அல்ல கந்தம் அல்ல மந்த நாடி உற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல
அரியதாக நின்ற நேர்மை யாவர் காண வல்லிரே.
சிவவாக்கியம் பாடல் 179 – மனத்தகத்து அழுக்கறாத
179. மனத்தகத்து அழுக்கறாத மவுன ஞான யோகிகள்,
வனத்தகத்து இருக்கினும் மனத்தகத் அழுக்கறார்.
மனத்தகத்து அழுக்கருத்த மவுன ஞானி யோகிகள்
முலைத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே!
சிவவாக்கியம் பாடல் 178 – நல்ல வெள்ளி
178. நல்ல வெள்ளி ஆறதாய், நயந்த செம்பு நால தாய்,
சொல்லு நாகம் மூன்ற தாய், குலாவு செம்பொன் இரண்டதாய்,
வில்லின் ஓசை ஒன்றுடன், இனங்க ஊத வல்லீரேல்,
எல்லையற்ற சோதியானை எட்டுமாற்றல்லாகுமே!
சிவவாக்கியம் பாடல் 177 – கோயில் பள்ளி
177. கோயில் பள்ளி ஏதடா? குறித்து நின்ற தேதடா?
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா?
ஞானமான பள்ளியில் , தன்மையாய் வணங்கினால்,
காயமான பள்ளியில் காணலாம் இறையையே !
சிவவாக்கியம் பாடல் 176 – வட்டமான கூட்டிலே
176. வட்டமான கூட்டிலே படர்ந்தெழுந்த அம்பு நீ ,
சட்டமீ படத்திலே சங்கு சக்கரங்களாய்
விட்டது அஞ்சு வாசலில் கதவினால் அடைத்த பின்,
முட்டையில் எழுந்த சீவன் விட்டு வாரதெங்கனே.
நிலா, பூமி இரண்டும் சூரியனைச் சுற்றி வருகிறது.
நிலா, பூமி இரண்டும் சூரியனைச் சுற்றி வருகிறது.
அதே போல் சூரியனை 7 வகையான சக்திகள் (ஒளி, ஒலி, வெப்பம், நீர்மம், புவி ஈர்ப்பு , காந்தம், மின்சாரம்) பின் நோக்கி சுழல வைக்கிறது.
அதாவது பூமி , நிலா, சுற்றுக்கு எதிர் திசையில் ச…
சிவவாக்கியம் பாடல் 175 – நட்ட தாவரங்களும்
175. நட்ட தாவரங்களும், நவின்ற சாத்திரங்களும்,
இட்டமான ஓம குண்ட இசைந்த நாலு வேதமும்.
கட்டி வைத்த புத்தகம், கடும் பிதற்றிதற்கெலாம்,
பெட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறியவே!.
திருக்கார்த்திகை தீப திருநாள்
இன்று சித்தர்கள் உருவாக்கிய விண்ணியல் கணிதப்படி வான்பார்த்து கிரகங்களின் உண்மையான இருப்பைக்கொண்டு கணிக்கப்பட்ட சித்தரியல் கணிதப்படி
*திருக்கார்த்திகை தீப திருநாள் ஆகும்*
சித்தனாதன் முருகன் கடவுள் ஆன ஐப்பசி மாதம் முதல்நிலவு நாளில்…
சிவவாக்கியம் பாடல் 174 – ஒன்றும் ஒன்று
174. ஒன்றும் ஒன்று ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே!
அன்றும் இன்றும் ஒன்றுமே! அனாதியானது ஒன்றுமே!
கண்றள் நின்ற செம்பொன்னை களிம்பறுத்து நாட்டினால்,
அன்று தெய்வம் உம்முளே அறிந்ததே சிவாயமே…
சிவவாக்கியம் பாடல் 173 – முத்தனாய் நினைந்தபோது
173. முத்தனாய் நினைந்தபோது முடிந்த அண்ட உச்சிமேல்,
அர்த்தநாரும் அம்மையும் பரிந்து பாடல் ஆடினார்.
சித்தரான ஞானிகாள் தில்லை ஆடல் என்பீர்காள்.
அர்த்த நாடலுற்ற போது அடங்கலாடல் உற்றதே.