சிவவாக்கியம் பாடல் 158 – நெத்திபத்தி உழலுகின்ற
158. நெத்திபத்தி உழலுகின்ற நீலமா விளக்கினைப்
பத்தியொத்தி நின்றுநின்று பற்றறுத்தது என்பலன்
உற்றிருந்து பாரடா உள்ளொளிக்கு மேலொளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே.
சிவவாக்கியம் பாடல் 157 – பார்த்தது ஏது
157. பார்த்தது ஏது பார்த்திடில், பார்வை ஊடு அழிந்திடும்.
கூத்ததாய் இருப்பிரேல், குறிப்பில் அச் சிவம் அதாம்.
பார்த்த பார்த்த போதெலாம், பார்வையும் இகந்து நீர்.
பூத்த பூவும் காயுமாய் பொருந்துவீர், பிறப்பிலே.
வட செலவு தொடக்கம்
வட செலவு தொடக்கம் சனவரி 14 இல் இருந்து திசம்பர் 22 வடசெலவு தொடங்குகிறது என்பது உண்மை. இனி ஒவ்வொரு ஆண்டும் தனுசு சங்கராந்தி என்பதில் எந்த ஐயமும் இல்லை. பழய மாதக்கணக்குப்படி தனுசு ஒன்றில் தான் மார்கழி மாதப்பெயர் இருந்தது அதனால் மா…
சிவவாக்கியம் பாடல் 156 – அக்கரம் அனாதியோ?
156. அக்கரம் அனாதியோ? ஆத்துமம் அனாதியோ?.
புக்கிருந்த பூதமும், புலன்களும் அனாதியோ? தர்க்கமிக்க நூல்களும், சாத்திரம் அனாதியோ?
தர்ப் பரத்தை ஊடறுத்த , சற்குரு அனாதியோ?
அ எழுத்து
நம் தமிழ் எழுத்தின் முதல் எழுத்தான அ நம் அண்டத்தின் , நான்கு கரங்களாக மலர்ந்த மலர்வினை குறிப்பதாக அமைகின்றது. அதில் நம் சூரியன் மலர்வதை ஆ எனும் எழுத்தின் இன்னுமொரு சுழியத்தின் மூலம் அமைத்து உள்ளார்கள். நம் சூரிய குடும்பத்தில் மூன்று சூர…
சிவவாக்கியம் பாடல் 155 – ந வ்வும், ம வ்வையும்
155. ந வ்வும், ம வ்வையும், கடந்து, நாடொனாத சி யின் மேல்,
வ வ்வும், ய வ்வுளும், சிறந்த வண்மையான பூதகம்,
உ வ்வு சுத்தி உன் நிறைந்த குச்சி ஊடு உருவியே,
இவ் வகை அறிந்த பேர்கள் , ஈசன் ஆனை ஈசனே !
சிவவாக்கியம் பாடல் 154 – ஐயன் வந்து
154. ஐயன் வந்து மெய் அகம் புகுந்தவாறு தெங்கனே!
செய்ய தெங்கு இளங்குரும்பை நீர் புகுந்த வண்ணமே !
ஐயன் வந்து மெய்யகம், புகுந்து கோயில் கொண்ட பின்,
வையகத்தில் மாந்தரோடு வாய் திறப்பதில்லையே!
சிவவாக்கியம் பாடல் 153 – அக்கிடீர் அனைத்து
153. அக்கிடீர் அனைத்து உயிர்க்கும் ஆதியாகி நிற்பது.
முக்கிடீர் உமை பிடித்து முத்தரித்து விட்டது.
மயக்கிடீர் பிறந்து இருந்து மாண்டு மாண்டு போவது,
ஒக்கிடீர் உமக்கு நான் உணர்த்து வித்தது உண்மையே !
பூமி, நிலா, சூரியன், சிவம் நான்கும் ஒரே நேர்கோட்டில் வரும்
பூமி சூரியனை சுற்றி வரும் பொழுது , மாசி மாதத்தில் ஒரு முறை 13ம் தேய் பிறையில் சிவத்தை நோக்கி , பூமி, நிலா, சூரியன், சிவம் நான்கும் ஒரே நேர்கோட்டில் வரும். புரட்டாசியிலும் இதே போல் நடக்கும். ஆனாலும் நாம் மகாசிவ ராத்திரியாக மா…
சிவவாக்கியம் பாடல் 152 – ஆட்டு இறைச்சி
152. ஆட்டு இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்,
ஆட்டு இறைச்சி அல்லவோ? யாகம் நீங்கள் ஆற்றலின். மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்,
மாட்டிறைச்சி அல்லவோ? மரக்கறிக்கு இடுவது.
சிவவாக்கியம் பாடல் 151 – மீன் இறைச்சி
151. மீன் இறைச்சி தின்றதில்லை, அன்றும் இன்றும் வேதியர்,
மீன் இருக்கும் நீரலல்லவோ? முழுகுவதும், குடிப்பதும்.
மான் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்,
மான் உரித்த தோலல்லோ? மார்பு நூல் அணிவதும்.
சிவவாக்கியம் பாடல் 150 – பிணங்குகின்றதேதடா?
150. பிணங்குகின்றதேதடா? பிரங்ஙை கெட்ட மூடரே?
பிணங்கிலாத பேரொளி , பிராணனை அறிகிலீர்.
பிணங்குமோ? இரு வினை, பிணக்கறுக்க , வல்லீரேல்.
பிணங்கிலாத பெரிய இன்பம், பெற்றிருக்கலாகுமே!