அனலம்மா என்றால் என்ன? (தமிழர்களின் விண்ணியல்)
Posted on நவம்பர் 25, 2025
.
அனலம்மா என்பது வடக்கு தெற்காக தெரியும் , சூரியனின் உயர மாறு பாட்டால் ஏற்படும் பிம்பம். நாம் கோள வடிவ பூமியில் இருக்கிறோம். பூமி வடக்கு தெற்கு அச்சில் கிழக்கு மேற்காக சுற்றிக் கொண்டு உள்ளது. இது போக 23.5 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றிக் கொண்டு உள்ளது. சூரியனைச் சுற்றி வரும் போது பூமியின் அச்சு மாறாமல் , வடக்கு திசையில் வட துருவ விண்மீனையும், தெற்கு திசையில் தென் துருவ மீனையும் பார்த்துக் கொண்டு , அந்த அச்சு மாறாமல் 23.5 திகிரி கிழக்கு மேற்கில் வடக்கு தெற்காக சாய்ந்த வட்டப் பாதையில் பூமி , சூரியனைச் சுற்றிக் கொண்டு உள்ளது. நாம் பூமியில் நிலநடுக் கோட்டிற்கு வடக்கே 23.5 திகிரிக்குள்ளும், தெற்கே 23.5 திகிரிக்குள்ளும் குடி இருந்தால், சூரியன் நம் தலைக்கு மேல் வந்து திரும்பிச் செல்லும். ஆனால் 23.5 திகிரிக்கு வெளியே எங்கு குடி இருந்தாலும் , சூரியன் தூரத்திலிருந்து , நம்மை நோக்கி வந்து , தூரத்திலேயே திரும்பி சென்று விடும். சூரியன் கதிர்கள் செங்குத்தாக தலைக்கு மேல் வராது. ஆனால் அங்கிருந்து , பார்த்தாலும் அனலம்மாவின் வடிவம் 8 போல் தெற்குபகுதியில் பெரிய வட்டமாகவும், வடக்கில் சிறிய வட்டமாகவும் , தெரியும். இதற்கு காரணம் பூமி சூரியனைச் சுற்றி நீள் வட்டத்தில் சென்று வருவதால் தான். இந்த அனலம்மாவின் வடிவம் நாம் குடி இருக்கும் இடத்திற்குத் தகுந்தாற்போல் 8 தெற்கு வடக்கில் நீளம் மாறுபடும். ஆனால் வெட்டுப் புள்ளி நிலநடுக் கோட்டின் வட பகுதியில் 10 திகிரியில் அமையும். அதற்கு காரணம் பூமியின் நீள் வட்டப் பாதைதான். சூரியனின் சுற்றுப் பாதையில் சூரியன் போகும் பாதையின் முன்னே பூமி பயணிக்கும் போது , அந்த அரை வட்டத்தில் , சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் குறையும். சூரியனின் சுற்றுப் பாதையில் , சூரியன் செல்லும் பாதையின் பின்புறம் பூமி பயணிக்கும் பொழுது , அந்த அரை வட்டத்தில் சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் சூரியனுக்கு முன்னால் பூமி பயணிக்கும் பொழுது அழுத்தமும், சூரியனுக்குப் பின்னால் பூமி பயணிக்கும் பொழுது , தளர்வும் ஏற்படுவதால் உண்டாகும் மாற்றம். இந்த நீள் வட்டத்தால், கிழக்கு மேற்காக ஏற்படும் உயர மாற்றம் தான் அனலம்மாவுக்கு காரணம். இந்த அனலம்மாவில் வடக்கில் 10 திகிரியில வெட்டுப் புள்ளி அமைவதற்கு காரணம் பத்து திகிரி அச்சு மாற்றம் , இந்த இரண்டாம் ஊழிக்குப் பிறகு பூமியின் அச்சு தூபன் விண்மீனிலிருந்து , தூருவ மீனுக்கு மாறியதால் ஏற்பட்டது. இந்த அச்சு மாற்றம் பூமியின் நடுவே உள்ள 8000 km உலோக பந்து தெற்கே சிறிது ஒதுங்கி தெற்கு தாழ்ந்ததால் தான். 10 திகிரி சாய்ந்து வடக்கு உயர்ந்ததால் , சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றி வருவதால் , அந்த அனலம்மாவின் உயர மாறுபாடு ஏற்படுகிறது. இதற்கும் எப்பொழுதும் மேச ராசியிலேயே தான் கால புருசன் இருப்பார் என்பதற்கும் சம்பந்தமில்லை. ஏப்ரல் – 14 – ல் தான் சித்திரை – 1 என்பதற்கும் சம்பந்தம் இல்லை. ஏனென்றால் வானில் நிகழ்வு இப்பொழது அப்படி இல்லை. மேசத்தில் இருந்து ஏப்ரல் – 14 விலகி விட்டது. பருவங்களுக்கும் , இந்த அனலம்மாவுக்கும் சம்பந்தம் இருக்காது. நில நடுக்கோட்டில் என்று சூரியன் வருகிறதோ , அன்று தான் உலகம் முழுமைக்கும் சம நாள். செங்குத்து கதிர் நாள் அந்தந்த ஊருக்கு மாறுபடும். அது தான் அவரவர்களுக்கு அக்னி நட்சத்திரம். கதிர் திருப்ப நாள் இரண்டு, சம நாள் இரண்டு, மற்றும் இரண்டு செங்குத்துக் கதிர் நாள் இவைகளுக்குள் தான் பருவங்கள் இருக்கும். ஆகையால் அனலம்மா வடிவத்துக்கும் ஏப்ரல் – 14 – சித்திரைக்கும் தொடர்பு இல்லை. அது இப்பொழுது மதுரையில் மையம் கொண்டு உள்ளது. அதனால் தான் நாம் மதுரையில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைத்தோம். இரண்டாம் ஊழியில் பொதிகை மலையில் மையம் கொண்டிருந்தது. கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் இருந்தாலும் தலைமை பொதிகை மலையாகத்தான் இருந்தது. ஏப்ரல் – 14-ல் சித்திரை – 1 இருந்தால் பருவங்கள் மாறுபடும். அதை கண்கூடாக காண்கிறோம். குச்சி நட்டு , அந்த குச்சியின் பின்புலத்தில் வான் பார்க்கப் பழகுவோம். நம் முன்னோர்கள் தமிழ் நாடு முழுவதும் கோயில்கள் எதற்கு கட்டி, எதை கனித்தார்கள் என யோசித்துப் புரிந்து கொள்வோம். குச்சியின் நிழலை தொடர்ந்து ஒரு வருடமாவது கவனித்தால் தான் பூமியின் சுற்று புரியும். இரவு வானத்தை குச்சியின் பின்புலத்தில் , ஒரு வருடமாவது கவனித்தால் நிலவின் சுற்றும், ராசிகளில் சூரியன் வலம் வருவதை புரிந்து கொள்ள முடியும். அப்பொழுது தான் அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் என்ன தொடர்பு என தெரியும். அதற்குப் பின்னர்தான் சோதிடத்தின் அடிப்படை புரியும். ஒரு மாத on-line வகுப்புகளில் சோதிடம் கற்றால் , அவர்கள் வாழ்வும், சக மனிதர்களின் வாழ்வும் நிலை தடுமாறத்தான் செய்யும். புரிந்து கொள்வோம், குச்சி நடுவோம் வான் பார்ப்போம்.
Related Posts
- சூரியன், பூமி, நிலா சுற்றுக்கள்
- 6 வருட leap ஆண்டுகள் மற்றும் வாரமும்
- 1. திருக்குறள்
- திருக்குறளின் 133 அதிகாரங்கள்
- 2. திருக்குறளில் வரும் முப்பால் . அதன் பொருள் என்ன?
- Introduction to SIDHAR IYAL
- சித்திரை வருசப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்.
- இன்று சமநாள். 20/ 3 / 2024.
- நிலாவின் ஓட்டத்தை புரிந்து கொள்வது என்பது விண்ணியலின் அடிப்படை.
- திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு
- நில பயிற்சி மையம் கலைநிலம் இணைந்து துடும்பாட்டம், கோவை வடவள்ளியில் அம்மன் கோயிலில்
- இது சற்று குழப்பமான பதிவாக தான் இருக்கும் இருந்தால் என்னால் முடிந்த வரை விளக்கமாக கூறுகிறேன்
- பருவங்கள் எப்பொழுதும், சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் வைத்துத்தான் இருக்கும்.
- தமிழர் மாத நாட்கள்
- ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து
- தமிழ் இறை மொழி
- எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ
- சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம்.
- திருக்குறள் முதல் அதிகாரத்தில் இரண்டாம் பாடல்
- சிவவாக்கியம் பாடல் 185 – பிறந்த போது கோவணம்
- சிவவாக்கியம் பாடல் 168 – உவமையில்லா பேரொளிக்கு
- முருகனின் இந்த சட்டி விரதத்திற்கு விளக்கும்
- 108 க்கும் நிலாவுக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு?
- திருக்குறளில் கடவுள் வாழ்த்து 3.ம் பாடல்.
- வட செலவு தொடக்கம்
- உச்சம் நீசம் என்றால் என்ன?
- கங்கை கொண்ட சோழபுரம். 20/3/2023.
- மேச ராசியிலிருந்து மீன ராசி திடீரென்று ஒரு நாள் மாறவில்லை.
- மகர சங்கராந்தி
- கர்ப்போட்ட காலம் , கேட்டை நல் சித்திரம் – சித்திரை – 1
- சோதிடம் என்றால் சோதி
- தமிழர்கள் போல் அல்லாமல் தெலுங்கு நாட்காட்டி சம நாளை
- நிலா, பூமி இரண்டும் சூரியனைச் சுற்றி வருகிறது.
- பூமி, நிலா, சூரியன், சிவம் நான்கும் ஒரே நேர்கோட்டில் வரும்
- சிதம்பர அ ரகசியம்
- அ எழுத்து
- இயற்கை தனது இயல்பில் எளிமையாக விளக்கிவிடுகிறது
- நெல் தேக்கி வைக்கும் முறை
- குச்சி நட்டு சம நாள்
- தஞ்சாவூர் கோபுர நிழல்.
- நிழல் குறிப்பது, பூமி 23.5 திகிரி சாயவில்லை , என்று புரிந்து கொள்வதற்காக.
- சித்திரை 1க்கு காட்டு மல்லி பூத்திருக்கு
- அங்கோர்வாட் கோயில்.
- திருப் போரூர் முருகன் கோயில்.
- திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில்.
- சாயனம் / நிராயனம் என்றால் என்ன?
- அயனாம்சம் என்றால் என்ன?
- சித்ரா பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தானே வர வேண்டும் , நமது காலண்டரில் ஏன் உத்திரத்தில் வருகிறது?
- சோதிடத்துக்கு அடிப்படை விண்ணியல்.
- தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ஒரு பாகை நகர 60 வருடத்தில் இருந்து 72 வருடமாக எத்தனை வருடங்கள் ஆகுமென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா?
- ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?
- நாழிகை கணிதவியல்
- நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்தல்
- நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா?
- ஏப்ரல் – 21 சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான்.
- நம் பூமிதான் மையம் இருக்கிறோமோ?
- ராகுவின் திசை – 18 வருடம்.
- அணலம்மா என்றால் என்ன ?
- அணலம்மாவின் வெட்டுப்புள்ளி
- நாம் பூமியில் எந்த அட்சரேகை, தீர்க்கரேகை
- விண்ணில் தெரியும் கோடானுகோடி சூரியன்கள் தான் விண்மீன்களாக நம் கண்களுக்குத் தெரிகிறது. அதில் நம் சூரியனும் ஒன்று.
- இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்தில் , வேளாண்மைக்காக சித்தரியல் நாட்காட்டி உருவாக்கப்பட்டது.
- சூரியனும் , மற்ற கோள்கள் போல 24 திகிரி சாயந்த வட்டப் பாதையில் தான் பயணம் செயகிறது
- மேஷம் தான் முதல் வீடு இது பிரபஞ்ச விதி, இதை எந்த காரணத்தை கொண்டும் மாற்ற கூடாது.
- ராகு என்றால் சூரிய கிரகணம்.
- கர்ப்போட்ட காலத்தில் நம் தலைக்கு மேல் உள்ள வானத்தில் பார்க்க வேண்டும்
- நம் சித்தரியல் நாட்காட்டி தற்போது ஒவ்வொரு 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் தள்ளி சமநாள் இருக்கும்
- முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை
- நாம் உணர்ந்த ஆடி 1