ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன? (தமிழர்களின் விண்ணியல்)
Posted on நவம்பர் 25, 2025
.
ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?. அனைவரும் சொல்லும் ஒரே காரணம்- ஏப்ரல் – 14 – ல் சூரியன் மீன ராசியில் இருந்து மேச ராசிக்கு வருவதால் அன்று சித்திரைப் புத்தாண்டு கொண்டாடுகிறோம். ஏப்ரல் – 14-ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட வேறு காரணம் ஏதாவது இருக்கிறதா? இல்லை. வேறு காரணம் ஏதும் இல்லை. ஏப்ரல் – 14 -ல் தான் மேச ராசியில் சூரியன் நுழைகிறது என்பதை எப்படி உறுதி செய்வது? வானத்தில் பார்த்தால் சூரியன் மேச ராசிக்கு அன்று வருகிறதா என பார்க்கலாம். ஏப்ரல் – 14-ல் சூரியன் மேச ராசிக்குள் செல்வதை வானத்தைப் பார்த்து உறுதி செய்யலாமா? முடியுமா? முடியும். வானத்தைப் பார்த்துத்தான் எடுத்த கணக்குகள், பஞ்சாங்க கணக்குகள். வானத்தில் வெறும் கண்ணால் ராசிகளையும், நட்சத்திரங்களையும் பார்க்க முடியுமா? பார்க்க முடியும். வானத்தைப் பார்த்து சூரியன் மேசராசிக்குள் ஏப்ரல் – 21 -ல் தான் நுழைகிறது என்றால் ஏப்ரல் – 21-ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாடலாமா? வானத்தைப் பார்த்தால் ஏப்ரல் – 21-ல் தான் சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான். இதை Stellerium App-லும் உறுதி செய்யலாம். இவர்கள் கூற்றுப்படி ஏப்ரல் – 21 – ல் தான் சூரியன் மேச ராசிக்குள் நுழைவதால் ஏப்ரல் – 21 -ல் தான் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட வேண்டும். ஏப்ரல் – 21-ல் சித்திரை புத்தாண்டு கொண்டாடினால் பருவங்கள் மாறி விடாதா? பருவங்கள் ஒரு மாதம் பின் தங்கி விடும். ஏப்ரல் – 14 -ல் மேச ராசியில் நுழைத்து கொண்டு இருந்த சூரியன் எப்பொழுதிலிருந்து ஏப்ரல் – 21 -ல் மேசராசிக்குள் நுழைய ஆரம்பித்தான் ?. 420 வருடங்களுக்கு முன்னாள் ஏப்ரல் – 14-ம் தேதி மேச ராசிக்குள் நுழைந்தான். ஒவ்வொரு 60 வருடங்களுக்கு ஒரு திகிரி சூரியன் நகர்ந்து இப்பொழுது ஏப்ரல் – 21 -ல் தான் சூரியன் மேசராசிக்குள் நுழைகிறான். ஏப்ரல் 14-ல் மீன ராசியில் 24 திகிரியில் தான் சூரியன் இருக்கிறான். March – 21 -ல் சம நாள் (equinox) என்று சொல்கிறார்களே , அப்படி என்றால் என்ன? அன்று தான் சூரியன் வட செலவில் (உத்ராயனத்தில்) நில நடுக்கோட்டில் உதிப்பான். அன்று உலகம் முழுவதும் பகல் 12 மணி நேரமாகவும், இரவு 12 மணி நேரமாகவும் சமமாக இருக்கும். சம நாளுக்கும் சித்திரைப் புத்தாண்டுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? 1800 வருடங்களுக்கு முன்னாள் , இதே சம நாளில் தான் நாம் சித்திரை புத்தாண்டு கொண்டாடினோம். அன்று தான் மேச ராசிக்குள் சூரியன் நுழைந்தான். இப்பொழுது 30 திகிரி நகர்ந்து சூரியன் மீன ராசிக்குள் செல்வதால் சித்திரைப் புத்தாண்டு சம நாளுக்கு அடுத்த நாளான மார்ச் 22 – லேயே ஆரம்பித்து விட்டது. இன்று சித்திரை 23-ம் ஆகி விட்டது. அக்னி நட்சத்திரம் நடந்து கொண்டு உள்ளது.
Related Posts
- சூரியன், பூமி, நிலா சுற்றுக்கள்
- 6 வருட leap ஆண்டுகள் மற்றும் வாரமும்
- 1. திருக்குறள்
- திருக்குறளின் 133 அதிகாரங்கள்
- 2. திருக்குறளில் வரும் முப்பால் . அதன் பொருள் என்ன?
- Introduction to SIDHAR IYAL
- சித்திரை வருசப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்.
- இன்று சமநாள். 20/ 3 / 2024.
- நிலாவின் ஓட்டத்தை புரிந்து கொள்வது என்பது விண்ணியலின் அடிப்படை.
- திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு
- நில பயிற்சி மையம் கலைநிலம் இணைந்து துடும்பாட்டம், கோவை வடவள்ளியில் அம்மன் கோயிலில்
- இது சற்று குழப்பமான பதிவாக தான் இருக்கும் இருந்தால் என்னால் முடிந்த வரை விளக்கமாக கூறுகிறேன்
- பருவங்கள் எப்பொழுதும், சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் வைத்துத்தான் இருக்கும்.
- தமிழர் மாத நாட்கள்
- ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து
- தமிழ் இறை மொழி
- எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ
- சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம்.
- திருக்குறள் முதல் அதிகாரத்தில் இரண்டாம் பாடல்
- சிவவாக்கியம் பாடல் 185 – பிறந்த போது கோவணம்
- சிவவாக்கியம் பாடல் 168 – உவமையில்லா பேரொளிக்கு
- முருகனின் இந்த சட்டி விரதத்திற்கு விளக்கும்
- 108 க்கும் நிலாவுக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு?
- திருக்குறளில் கடவுள் வாழ்த்து 3.ம் பாடல்.
- வட செலவு தொடக்கம்
- உச்சம் நீசம் என்றால் என்ன?
- கங்கை கொண்ட சோழபுரம். 20/3/2023.
- மேச ராசியிலிருந்து மீன ராசி திடீரென்று ஒரு நாள் மாறவில்லை.
- மகர சங்கராந்தி
- கர்ப்போட்ட காலம் , கேட்டை நல் சித்திரம் – சித்திரை – 1
- சோதிடம் என்றால் சோதி
- தமிழர்கள் போல் அல்லாமல் தெலுங்கு நாட்காட்டி சம நாளை
- நிலா, பூமி இரண்டும் சூரியனைச் சுற்றி வருகிறது.
- பூமி, நிலா, சூரியன், சிவம் நான்கும் ஒரே நேர்கோட்டில் வரும்
- சிதம்பர அ ரகசியம்
- அ எழுத்து
- இயற்கை தனது இயல்பில் எளிமையாக விளக்கிவிடுகிறது
- நெல் தேக்கி வைக்கும் முறை
- குச்சி நட்டு சம நாள்
- தஞ்சாவூர் கோபுர நிழல்.
- நிழல் குறிப்பது, பூமி 23.5 திகிரி சாயவில்லை , என்று புரிந்து கொள்வதற்காக.
- சித்திரை 1க்கு காட்டு மல்லி பூத்திருக்கு
- அங்கோர்வாட் கோயில்.
- திருப் போரூர் முருகன் கோயில்.
- திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில்.
- சாயனம் / நிராயனம் என்றால் என்ன?
- அயனாம்சம் என்றால் என்ன?
- சித்ரா பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தானே வர வேண்டும் , நமது காலண்டரில் ஏன் உத்திரத்தில் வருகிறது?
- சோதிடத்துக்கு அடிப்படை விண்ணியல்.
- தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ஒரு பாகை நகர 60 வருடத்தில் இருந்து 72 வருடமாக எத்தனை வருடங்கள் ஆகுமென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா?
- நாழிகை கணிதவியல்
- நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்தல்
- நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா?
- ஏப்ரல் – 21 சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான்.
- நம் பூமிதான் மையம் இருக்கிறோமோ?
- ராகுவின் திசை – 18 வருடம்.
- அணலம்மா என்றால் என்ன ?
- அனலம்மா என்றால் என்ன?
- அணலம்மாவின் வெட்டுப்புள்ளி
- நாம் பூமியில் எந்த அட்சரேகை, தீர்க்கரேகை
- விண்ணில் தெரியும் கோடானுகோடி சூரியன்கள் தான் விண்மீன்களாக நம் கண்களுக்குத் தெரிகிறது. அதில் நம் சூரியனும் ஒன்று.
- இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்தில் , வேளாண்மைக்காக சித்தரியல் நாட்காட்டி உருவாக்கப்பட்டது.
- சூரியனும் , மற்ற கோள்கள் போல 24 திகிரி சாயந்த வட்டப் பாதையில் தான் பயணம் செயகிறது
- மேஷம் தான் முதல் வீடு இது பிரபஞ்ச விதி, இதை எந்த காரணத்தை கொண்டும் மாற்ற கூடாது.
- ராகு என்றால் சூரிய கிரகணம்.
- கர்ப்போட்ட காலத்தில் நம் தலைக்கு மேல் உள்ள வானத்தில் பார்க்க வேண்டும்
- நம் சித்தரியல் நாட்காட்டி தற்போது ஒவ்வொரு 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் தள்ளி சமநாள் இருக்கும்
- முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை
- நாம் உணர்ந்த ஆடி 1