மேஷம் தான் முதல் வீடு இது பிரபஞ்ச விதி, இதை எந்த காரணத்தை கொண்டும் மாற்ற கூடாது. (தமிழர்களின் விண்ணியல்)
Posted on நவம்பர் 25, 2025
.
மேஷம் தான் முதல் வீடு இது பிரபஞ்ச விதி, இதை எந்த காரணத்தை கொண்டும் மாற்ற கூடாது. வின் ஞான / மெய் ஞான விளக்கங்கள் இந்த பதிவில் விளக்கியுளேன். இந்த தத்துவம் விளங்கினாள் அனைத்தும் விளங்கிவிடும் இதில் பஞ்ச பூத தத்துவம் / ராசி பஞ்ச பூத தொடர்பு தன்மை / கிரக உச்சம் நீச்சம் விளக்கம் / சர, ஸ்திர, உபய ராசி என்றால் என்ன அவற்றின் தன்மை என்னவென்று விளக்கியுள்ளேன். இறுதியாக முடிவுரை சூரியனுக்கும் உயிரினத்துக்கு உள்ள தொடர்பை ஏன் மேஷம் வைத்தனர் என்று விளக்கி உள்ளேன். சரம், ஸ்திரம், உபயம்.விளக்கம். இந்த தத்துவம் விளங்கினாள் அனைத்தும் விளங்கிவிடும் சரம், ஸ்திரம், உபயம் என்று மூன்று பிரிவுகளாக நமது சித்தர்கள் பிரித்து இருக்கிறார்கள். சரம் என்றால் மிகவும் வீரியம் மிக்க தன்மையுள்ளது என்று பொருள். ஸ்திரம் என்றால் நிலைத்த தன்மையுள்ளது என்று பொருள் உபயம் என்றால் உப + அங்கம் அதாவது தனி தன்மை இல்லாமல் வேறு ஒரு தன்மை உடன் சேர்ந்து ஆற்றலை வெளிப்படுத்துவது என்று பொருள். சர ராசிகள் மேஷம், கடகம், துலாம் மகரம் ஸ்திர ராசிகள் ரிஷபம், சிம்மம், விருச்சகம், கும்பம். உபய ராசிகள் மிதுனம், கன்னி, தனுசு, மீனம். பஞ்ச பூதத்துடன் ராசி காண தன்மை முதலில் ராசிகளை பஞ்ச பூதத்துடன் விளங்கி கொள்ளவேண்டும், மேஷம், சிம்மம், தனுசு நெருப்பு பூத தன்மை உடன் ஒற்றுமை செய்து கொள்ளுங்கள். ரிஷபம், கன்னி, மகரம் மண் பூத தன்மை உடன் ஒற்றுமை செய்து கொள்ளுங்கள். மிதுனம், துலாம், கும்பம் காற்று பூத தன்மை உடன் ஒற்றுமை செய்து கொள்ளுங்கள். கடகம், விருச்சிகம், மீனம் நீர் பூத தன்மை உடன் ஒற்றுமை செய்து கொள்ளுங்கள். ஆகாயம் தன்மைகு வெற்றிடம் இதற்கு வீடு இல்லை. இது இந்த நான்கு பூததுடன் சேர்ந்து இருக்கும். விளக்கமாக பார்ப்போமா எது சர ராசி என்றும் எந்த பூதத்துடன் தொடர்பு உடையது என்று சர ராசிகள் மேஷம் (நெருப்பு), கடகம்,(நீர்), துலாம் (காற்று), மகரம் (மண்). ஸ்திர ராசிகள் ரிஷபம் (மண்), சிம்மம் (நெருப்பு), விருச்சகம் (நீர்), கும்பம் (காற்று) உபய ராசிகள் மிதுனம் (காற்று) , கன்னி (மண்), தனுசு (நெருப்பு) , மீனம்.(நீர்) இப்படி தான் இந்த பிரபஞ்சம் வடிவமைத்து இருக்கிறது. இது தான் பஞ்சபூதமற்றும் ராசி கட்ட சூத்திரம். கிரக உச்ச நீச்சம் என்னவென்று பார்ப்போமா இதற்கும் சர, ஸ்திர, உபய தொடர்பை பார்ப்போம் உச்சம் என்றால் அந்த கிரகம் அடைந்த முழு ஒளி மற்றும் சக்தி, நீச்சம் என்றால் அந்த கிரகம் இழந்த ஒளி மற்றும் சக்தி. எந்த கிரக எப்போது உச்சம் / நீச்சம் அடைகிறது.பார்ப்போமா அதற்கும் பஞ்ச பூத்ததிற்கும் என்ன தொடர்பு பார்ப்போமா. நமது தமிழ் மாதங்கள் ஆன சித்திரை, வைகாசி ஆணி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி இந்த 12 மாதங்களும் பனிரெண்டு ரசிகளாக நமது சித்தர்கள் அமைத்து உள்ளார்கள். இப்போது எந்த ராசியில் எந்த கிரகம் உச்சம் / நீச்சம் அடைகிறது என்று பார்ப்போம் அது சர ராசியா ஸ்திர ராசியா உபய ராசியா என்று பார்ப்போம். சூரியன் உச்சம் அடைவது மேஷம் (சர நெருப்பு தன்மை), நீச்சம் அடைவது நேர் எதிர் ராசியான துலாம் (சர காற்று) அதாவது. தமிழ் மாதம் கோட்பாட்டின் படி சித்திரை இல் உச்சம் அடைந்து, ஐப்பசி இல் நீச்சம் அடையும், அதாவது மேஷம் ஒளி / சக்தி மிகுந்ததாக உம், துலாம் ஒளி / சக்தி இழந்த தாகவும் பொருள். இதனால் என்ன நடக்கும் வெயில் / உஷ்ணம் காலமாகவும், மழை / குளிர் காலமாகவும் மாறும். இப்போது புரிகின்றதா சர நெருப்பு தன்மை இல் உச்சம் ஆகி ஸ்திர காற்று தன்மையில் நீச்சம் ஆகின்றது. இங்கு சூரியன் எங்கும் போவதில்லை, நம் பூமி தான் சூரியனை சுற்றுகிறது. இங்கு சூரியன் உச்சம் ஆவது / நீச்சம் ஆவது என்பது நிஜத்தில் பூமி தான் ஆகிறது. சந்திரன் உச்சம் ஆவது ரிஷபம் ( ஸ்திர மண்) நீச்சம் ஆவது விருச்சகம் (ஸ்திர நீர்) செவ்வாய் உச்சம் ஆவது விருச்சகம் (ஸ்திர நீர்) நீச்சம் ஆவது ரிஷபம் ( ஸ்திர மண்) புதன் உச்சம் ஆவது கன்னி (உபய மண் ) நீச்சம் ஆவது மீனம் ( உபய நீர் ) குரு உச்சம் ஆவது கடகம் (ஸ்திர நீர்)) நீச்சம் ஆவது மகரம் ( சர மண் ) சுக்கிரன் உச்சம் ஆவது மீனம் (உபய நீர்)) நீச்சம் ஆவது கன்னி ( உபய மண் ) 7.சனி உச்சம் ஆவது துலாம் (ஸ்திர காற்று), நீச்சம் ஆவது மேஷம் (சர நெருப்பு ) ராகு / கேது க்கு உச்சம் / நீச்சம் கிடையாது. அருவ கிரகத்திற்கு வீடுகள் கிடையாது, இதிலிருந்து உங்களுக்கு நன்றாக விளங்கி இருக்கும் என்று நம்புகிறேன். இது தான் பஞ்ச பூத கட்டமைப்பு இந்த மேலே சொன்ன அணைத்து சேர்ந்தது தான் ஜாதகம் / பிரபஞ்சம். இதை விண்ஞானதால் புரிந்து கொள்ள முடியாது, மெய் ஞானத்தால் தான் புரிந்து கொள்ள முடியும். அதனால் தான் நம் சித்தர்கள் இதை உணர்ந்து விளக்கி உள்ளார்கள். இது ஒரு வாகனம் போல ஒரு பகுதி இல்லாமல் மற்றொன்று இயங்காது. (its core function) ஸ்டெல்லர் ஆப், சர , ஸ்திர , உபய நிலைகளை விளக்காது, கிரக உச்சம் நீச்சதை விளக்காது, பஞ்ச பூத தன்மையை விளக்காது. இது வெறும் வானில் உள்ள நிலைகள் மட்டுமே காட்டும். நமது சித்தர்கள் அமைத்த அடிப்படைஐ வைத்து தான் புரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த மேஷம் முதல் வீடு தான் சரியான கணிதம். சூரியனுக்கும் உயிரினத்துக்கு உள்ள தொடர்பை ஏன் மேஷம் வைத்தனர் சூரியனுக்கு எனும் போது பூமி என்று பொருள் கொள்ள வேண்டும் (சூரியன் உச்ச நீச்ச கோட்பாட்டின் படி) . மேலும் சூரியனுக்கு ஆத்ம காரகன் என்ற கரகதுவம் உண்டு. நம் சித்தர்கள் இந்த பெயரை சும்மா வைக்கவில்லை. சூரியன் என்றால் பூமி (சூரியன் உச்ச நீச்ச கோட்பாட்டின் படி) ஆத்மா களின் வாழ ஆதாரமான பூமி, மேஷத்தில் (சர நெருப்பு) உச்சம் / அதிக சக்தி பெரும் ராசியே முதல் ராசி. (ஆத்ம காரகனான சூரியன் உச்சம் பெரும் ராசியே மேஷம் முதல் ராசி). மேஷம் தில் பூமி உச்சம் — இதில் சரம் ஜீவ ராசிகளின் வீரியம் வந்து விட்டது, நெருப்பு சக்தி வந்து விட்டது (உஷ்ண நிலை உயரும்) , உச்சம் அதிக ஒளி வந்து விட்டது (சூரியனுக்கு நெருக்கத்தில் பூமி), இந்த அமைப்பு மேஷம் முதல் வீடு, எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும் மாறாது. மாற்றவும் முடியாது. நாம் கணிதத்திற்கு மாற்றி அமைத்தாலும்.கூட, இந்த பிரபஞ்ச ஒழுங்கு விதி மாறாது. மீறி மாற்றினால் இதனால் ஜாதகம் கணிதம் சரியான தீர்வை தராது. நான் இந்த குரூப்பிற்கு வந்த நோக்கமே, நமது சித்தர்கள் சரியான முறையை கொடுத்து உள்ளார்கள்.அதை மாற்ற கூடாது என்பதற்காகதான் வந்தேன். எனக்கு சித்தர்கள் கணிதம் மற்றும் அடிப்படை சூத்திரம் மீது ஆணி தரமான நம்பிக்கை உள்ளது.30 வருட காலம் ஆராச்சியில். இருந்து உள்ளேன். என்னால் முடிந்த வரை பாமரனுக்கும் புரியும் படி எளிமையாக விளக்கியுள்ளேன். ஜோதிடம் என்பது பெரிய சமுத்திரம், இந்த விளக்கம் ஒன்றுக்கு 10 முறை திரும்ப திரும்ப படியுங்கள் உங்களுக்கே புரியும்.அதை விட்டு விட்டு வெறும் கேள்விகள் கேட்க்காதிர்கள், உணர்வுடன் திரும்ப படித்தால் உங்களுக்கே புரியும். இந்த விளக்கம் ஒரு சில ஜோதிடருக்கு புரியும். எனக்கு வேலை பளு காரணமாக நேரம் கிடைப்பது மிகவும் கடினம் அதனால் அணைத்து கேள்விகளுக்கும். என்னால் பதில் சொல்ல இயலாது, எனது சார்பாக இந்த குரூப்பில் ஜோதிடர்கள் பதில் கூறலாம். வேண்டுகோள் கேள்விகளை நிதானமாக அறிவுப்பூரமாக கேட்கவும், விதண்டாவாதம் போல் கேள்விகளை கேட்கவேண்டாம். இந்த கோட்பாடு புரிந்தால் மாற்ற தேவை இருக்காது, இந்த குரூப் நோக்கம் சீக்கிரமே முடிவுக்கு வந்து விடும்.நிறைய அன்பர்களின் நேரம் மிச்ச மாகும் நன்றி அன்பர்களே இந்த விளக்கங்கள் அனைத்தும் சரி என்று வைத்துக் கொண்டால். மேசத்தில் உச்சம் அடைந்து கொண்டு இருந்த சூரியன் இப்பொழுது நகர்ந்து மீனத்தில் உச்சம் பெறுகிறான். ஆகவே போன 1800 வருடங்கள் சரி இனி வரும் காலங்களில் மீனம் முதல் கட்டமாக்கி வைத்தால் தான் அனைத்தும் சரியாகும் . அது மேச யுகம். இனிமேல் இது மீன யுகம். கால புருசன் நகர்ந்து மீனத்துக்கு வந்ததால் மீனம் தான் முதல் கட்டம். நம் முன்னோர்கள் சரியாகத்தான் கனித்து சொல்லி இருக்கிறார்கள். அதற்குத் தான் கோயில்களும் கொடி மரங்களும் ஊர் முழக்க வைத்தார்கள். அந்த காலங்களில் அதை update செய்ய. கடந்த 420 ஆண்டுகளாக மேசம் தான் முதல் கட்டம் என்று கட்டுக் கதைகளை சொல்லி, நம்மை வான் பார்க்க விடாமல் கொடி மரங்களை மண்டபம் கட்டி மறைத்து விட்டார்கள். அவரவர் வீடுகளில் குச்சி நட்டுப் பார்த்ததில் புரிந்து விட்டது அவர்கள் கட்டுக் கதைகள் எல்லாம். காலப் புருசன் அவர் தன் வேலையை சரியாக வானத்தில் செய்து கொண்டு ராசிகளை கடந்து கொண்டு உள்ளார். எப்பொழுதும் மேசம் தான் முதல் ராசி என்றால் ராசிகளுக்கு மாதத்தின் பெயர்களையே கொடுத்து இருப்பார்கள். ராசிகளுக்கு வேறு பெயர்கள் கொடுத்தது அவற்றின் குணங்கள் மாறும் என்பதால் தான். காலப் புருசன் ராசி கட்டங்களில் நகர்ந்ததால் குணங்கள் மாறி விட்டது. இப்பொழுது மீனராசியில் தான் அக்னி நட்சத்திரம் வருகிறது. கேட்டை நட்சத்திரத்தில் தான் கர்ப்ப ஓட்டம் நிகழ்கிறது. ஆனால் மாதங்களின் குணங்கள் எப்பொழுதும் மாறாது. அதனால் நாம் காலப் புருசன் நகர்ந்தால் அவன் நில நடுக் கோட்டில் இருந்து 30 திகிரி நகரும் வரை காத்திருந்து மீண்டும் , எந்த கட்டத்தில் சூரியன் இருக்கிறாரோ அந்த கட்டத்தை முதல் கட்டமாக்கினால் தான் பருவங்களும், நம் சோதிடமும் சரியாகும்.
Related Posts
- சூரியன், பூமி, நிலா சுற்றுக்கள்
- 6 வருட leap ஆண்டுகள் மற்றும் வாரமும்
- 1. திருக்குறள்
- திருக்குறளின் 133 அதிகாரங்கள்
- 2. திருக்குறளில் வரும் முப்பால் . அதன் பொருள் என்ன?
- Introduction to SIDHAR IYAL
- சித்திரை வருசப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்.
- இன்று சமநாள். 20/ 3 / 2024.
- நிலாவின் ஓட்டத்தை புரிந்து கொள்வது என்பது விண்ணியலின் அடிப்படை.
- திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு
- நில பயிற்சி மையம் கலைநிலம் இணைந்து துடும்பாட்டம், கோவை வடவள்ளியில் அம்மன் கோயிலில்
- இது சற்று குழப்பமான பதிவாக தான் இருக்கும் இருந்தால் என்னால் முடிந்த வரை விளக்கமாக கூறுகிறேன்
- பருவங்கள் எப்பொழுதும், சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் வைத்துத்தான் இருக்கும்.
- தமிழர் மாத நாட்கள்
- ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து
- தமிழ் இறை மொழி
- எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ
- சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம்.
- திருக்குறள் முதல் அதிகாரத்தில் இரண்டாம் பாடல்
- சிவவாக்கியம் பாடல் 185 – பிறந்த போது கோவணம்
- சிவவாக்கியம் பாடல் 168 – உவமையில்லா பேரொளிக்கு
- முருகனின் இந்த சட்டி விரதத்திற்கு விளக்கும்
- 108 க்கும் நிலாவுக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு?
- திருக்குறளில் கடவுள் வாழ்த்து 3.ம் பாடல்.
- வட செலவு தொடக்கம்
- உச்சம் நீசம் என்றால் என்ன?
- கங்கை கொண்ட சோழபுரம். 20/3/2023.
- மேச ராசியிலிருந்து மீன ராசி திடீரென்று ஒரு நாள் மாறவில்லை.
- மகர சங்கராந்தி
- கர்ப்போட்ட காலம் , கேட்டை நல் சித்திரம் – சித்திரை – 1
- சோதிடம் என்றால் சோதி
- தமிழர்கள் போல் அல்லாமல் தெலுங்கு நாட்காட்டி சம நாளை
- நிலா, பூமி இரண்டும் சூரியனைச் சுற்றி வருகிறது.
- பூமி, நிலா, சூரியன், சிவம் நான்கும் ஒரே நேர்கோட்டில் வரும்
- சிதம்பர அ ரகசியம்
- அ எழுத்து
- இயற்கை தனது இயல்பில் எளிமையாக விளக்கிவிடுகிறது
- நெல் தேக்கி வைக்கும் முறை
- குச்சி நட்டு சம நாள்
- தஞ்சாவூர் கோபுர நிழல்.
- நிழல் குறிப்பது, பூமி 23.5 திகிரி சாயவில்லை , என்று புரிந்து கொள்வதற்காக.
- சித்திரை 1க்கு காட்டு மல்லி பூத்திருக்கு
- அங்கோர்வாட் கோயில்.
- திருப் போரூர் முருகன் கோயில்.
- திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில்.
- சாயனம் / நிராயனம் என்றால் என்ன?
- அயனாம்சம் என்றால் என்ன?
- சித்ரா பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தானே வர வேண்டும் , நமது காலண்டரில் ஏன் உத்திரத்தில் வருகிறது?
- சோதிடத்துக்கு அடிப்படை விண்ணியல்.
- தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ஒரு பாகை நகர 60 வருடத்தில் இருந்து 72 வருடமாக எத்தனை வருடங்கள் ஆகுமென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா?
- ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?
- நாழிகை கணிதவியல்
- நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்தல்
- நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா?
- ஏப்ரல் – 21 சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான்.
- நம் பூமிதான் மையம் இருக்கிறோமோ?
- ராகுவின் திசை – 18 வருடம்.
- அணலம்மா என்றால் என்ன ?
- அனலம்மா என்றால் என்ன?
- அணலம்மாவின் வெட்டுப்புள்ளி
- நாம் பூமியில் எந்த அட்சரேகை, தீர்க்கரேகை
- விண்ணில் தெரியும் கோடானுகோடி சூரியன்கள் தான் விண்மீன்களாக நம் கண்களுக்குத் தெரிகிறது. அதில் நம் சூரியனும் ஒன்று.
- இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்தில் , வேளாண்மைக்காக சித்தரியல் நாட்காட்டி உருவாக்கப்பட்டது.
- சூரியனும் , மற்ற கோள்கள் போல 24 திகிரி சாயந்த வட்டப் பாதையில் தான் பயணம் செயகிறது
- ராகு என்றால் சூரிய கிரகணம்.
- கர்ப்போட்ட காலத்தில் நம் தலைக்கு மேல் உள்ள வானத்தில் பார்க்க வேண்டும்
- நம் சித்தரியல் நாட்காட்டி தற்போது ஒவ்வொரு 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் தள்ளி சமநாள் இருக்கும்
- முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை
- நாம் உணர்ந்த ஆடி 1