Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 27 – வீடெடுத்து வேள்வி (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

வீடெடுத்து வேள்வி செய்து மெய்யரோடு , பொய்யுமாய், மாடு, மக்கள், பெண்டிர், சுற்றம், என்றிருக்கும், மாந்தர்காள். நாடு பெற்ற நடுவர் கையில் ஓலை வந்து அழைத்திடில், ஓடு பெற்றது அவ்விலை, பெறாது காணும் உடலமே!

பெரிய வீடுகள் கட்டி முடித்து, வேள்விகள் செய்து, இந்த உடல் (மெய்) கொண்டவர்களோடு பொய்யுமாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். மாடு, மக்கள், மனைவி, குழந்தைகள், சுற்றம் சூழ வாழ்ந்து , வரும்போது, நாடு பெற்ற நடுவன் என்றால் யமன் வந்து அழைக்கும் போது, இந்த மெய் உடல், நம் கூரையில் வேய்ந்த ஓட்டின் விலையை கூட , கொடுத்து , யாரும், வாங்க மாட்டார்கள்.

Related Posts