Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 145 – ஈனெருமையின் கழத்தில் (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

145. ஈனெருமையின் கழத்தில் இட்ட பொட்டனங்கள் போல், மூனு நாலு சீலையில், முடிந்து, அவிழ்க்கும் மூடர்காள். மூனு நாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை, ஊனி ஊனி நீர் முடிந்த உண்மை என்ன உண்மையே!

எருமை வளர்ப்பவர்கள் , அது ஈனும் சமையத்தில் கழத்தில் 3 மருந்து பொட்டனங்கள் கட்டி வைப்பார்கள்.,(அதாவது ஒரு பயன்பாடு இருக்கிறது) பிரசவ சமயத்தில் பயன்படும் என்பதற்காக. அது போல் , காலை குளிக்கும் முன் சீலையில் முடிச்சு போட்டு கழத்தில் மாட்டி , பின் அவிழ்க்கிறீர்களே மூடர்களே என்கிறார் அப்படி செய்பவர்களைப் பார்த்து. முடிவிலாத மூர்த்தியை , 3, 4 லோகமும் பரந்த விரிந்த பரமனை ஊனி ஊனி என்ன நினைத்து ? முடிச்சு போடுவதன் உண்மை என்ன உண்மையோ? (கேட்டால் செய்த பாவங்களும், செய்யும் பாவங்களும், செய்யப் போகும் பாவங்களும் அகலும் என சொல்வார்கள்) என அங்கலாய்க்கிறார்.

Related Posts