Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 113 – கார கார (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

113.கார கார கார கார காவல் ஊழி காவலன். போர போர போர போர போரில் நின்ற புண்ணியன். மாற மாற மாற மாற மறங்கள் ஏழம் எய்து. சீ ராம ராம ராம ராம என்னும் நாமமே !

அரகரா அரகரா தான் கார கார கார. அவன் தான் நம்மை முதல் ஊழியில், குமரி கண்டத்தில் இருந்து- காவடியுடன் காப்பாற்றியவன். அவன் தான் நம்மை போருக்கும் தயார் செய்தவன். ஏழ வகையான அறம் மறம் என நமக்கு கற்றுக் கொடுத்து மறவர்களை உருவாக்கியவன் அவன்தான். இந்த அரகரா எனும் நாமத்தை ஓதாமல், ராம ராம எனும் நாமத்தை ஓதுகிறவர்களைப் பார்த்து சீ என்கிறார்.

Related Posts